states

பாஜக முதல்வரின் செயலற்ற தன்மையை விமர்சித்த பழங்குடி மாணவர் படுகொலை!

இம்பால், ஜூலை 24 - மணிப்பூர் மாநிலத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நடை பெற்றுவரும் வன்முறை, இதுவரை 165-க்கும் அதிகமானோரின் உயிரை பறித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் காயம் அடைந்துள்ளனர். தீவைப்புச் சம்பவங்களால் வீடு, வாக னம், கடைகள் உள்ளிட்ட உடமைகளை இழந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் சொந்த மண்ணிலேயே அகதி களாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள் ளனர். இதனிடையே, கடந்த ஜூலை 19 அன்று வெளியான வீடியோ, மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களின் ஒருபகுதி யாக, குக்கி பழங்குடி பெண்கள் பலர், கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட கொடூரத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்தது. முதலில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட  வீடியோ வெளியான நிலையில், தற் போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட மேலும் பல கொடுமைகள் தெரிய வந்துள்ளன. மொத்தம் 12-க்கும் மேற்பட்ட பெண்கள் - குழந்தைகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டு இருக்கின்றனர் என்ற உண்மை வெளியாகியுள்ளது.  இவற்றில் பெரும்பாலானவை, கல வரத்தின் ஆரம்ப நாட்களான மே  மாதத்திலேயே நடந்தவை என்பதும்,  2 மாதங்களுக்குப் பிறகே அவை தற்போது ஒவ்வொன்றாக வெளிவரு கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில்தான், வன்முறை தொடங்கிய மே மாதம் முதல்  வாரத்தில், போலீஸ் காவலில் இருந்த  குக்கி சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரை, கும்பல் ஒன்று அடித்தே கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. சூரசந்த்பூரில் உள்ள கல்லூரியில் பி.ஏ. புவியியல் படித்து வருபவர் ஹங்லால்முவான் வைபேய். 21 வயதேயான இவர், குக்கி இன மக்க ளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மெய்டெய் வகுப்பைச் சேர்ந்த பாஜக அரசியல்வாதிகளையும், முதல்வர் பைரேன் சிங்-கையும் விமர்சித்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.  இதற்காக போலீசார் அவரை கைது செய்து, மே 4 அன்று நீதிபதி முன்  ஆஜர்படுத்திவிட்டு சஜிவா சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சுற்றி வளைத்த 800 பேர் கொண்ட கும்பல், மாணவர் ஹங்லால்முவான் வைபேயைக் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், குக்கி மாணவர் கொடூரமாக அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரின் உடலை கூட பெற்றோர்  வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்த பொரம்பட் காவல்நிலைய போலீசார், உண்மை யை மறைத்து, மாணவர் ஹங்லால்மு வான் வைபேய் காவலில் மரணம் என்ப தாகத் தேசிய மனித உரிமை ஆணை யத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.